மல்லர்கம்ப கலைகளில் கலக்கி வரும் மாற்றுத்திறனாளிகள் - அரிய கலையில் அசத்தும் இளைஞர்கள்
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில், கை, கால் இல்லாத மாற்றுத்திறனாளிகள், பாரம்பரிய விளையாட்டான மல்லர்கம்ப கலையில் ஈடுபட்டு, காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றனர்.
இந்த கலையை கற்பதால் உடல் ஆரோக்கியத்துடன், நாள் முழுவதும் புத்துணர்வுடன் திகழ்வதாக கூறுகிறார் மற்றொரு மாற்றுத்திறளாளி இளைஞர்.
இந்த கலையை கற்பதன் மூலம், உடல் ஆரோக்கியத்துடன், மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலும் அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் அனைவரும் இந்த கலையை கற்கலாம் என்கிறார் பயிற்சியாளர் ஆதித்தன்..
மன உறுதியும், தன்னம்பிக்கையும் இருந்தால், உடல் குறைபாடு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ள இந்த மாற்றுத்திறனாளிகள் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் தன்னம்பிக்கை டானிக்குகள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
