"மாநிலங்களவை தேர்தல் : நாளை வேட்பு மனு பெறப்படும்" - தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வரும் 13ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என தமிழக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
"மாநிலங்களவை தேர்தல் : நாளை வேட்பு மனு பெறப்படும்" - தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பு
Published on

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வரும் 13ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என தமிழக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. நாளை அரசு விடுமுறை நாளாக இருப்பினும், தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரியிடம் வேட்பு மனுவை வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

வரும் 16ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும், மனுக்களை வரும் 18ஆம் தேதிக்குள் வாபஸ் பெற்று கொள்ளலாம் எனவும் கூறியுள்ள சட்டப்பேரவை செயலகம், தேர்தலில் போட்டி இருந்தால், வரும் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com