சென்னையின் மிகப்பெரிய குப்பை கிடங்கில் பெண் செய்த பாவம்.. போலீஸ் போட்ட போடில் அம்பலமான நாடகம்

சென்னையின் மிகப்பெரிய குப்பை கிடங்கில் பெண் செய்த பாவம்.. போலீஸ் போட்ட போடில் அம்பலமான நாடகம்
Published on

மதுரவாயல் தனலட்சுமி நகர் 6வது தெருவை சேர்ந்தவர், அஞ்சலி. இவர், தனது 3 மாத ஆண் குழந்தையை, மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அஞ்சலியிடம் மதுரவாயல் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அஞ்சலி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில், அஞ்சலியே குழந்தையை எடுத்து சென்று குப்பைதொட்டியில் வீசியது தெரியவந்தது. அந்த குப்பை தொட்டியில் இருந்த குப்பைகளை, மாநகராட்சி லாரியானது சேகரித்து, பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டியுள்ளது. இந்நிலையில், பெருங்குடி குப்பை கிடங்கில் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com