மார்கண்டேயன் நதியை கடந்த கோதண்டராமர் சிலை

பெங்களூர் செல்லும் கோதண்டராமர் சிலை 5 நாட்களுக்கு பிறகு மார்கண்டேயன் நதியை கடந்தது.
மார்கண்டேயன் நதியை கடந்த கோதண்டராமர் சிலை
Published on
கடந்த 3 ஆம் தேதி கிருஷ்ணகிரி அருகே குருபரபள்ளி என்ற பகுதிக்கு சிலை கொண்டு வரப்பட்ட நிலையில், அங்குள்ள மார்கண்டேய நதி பாலம் 200 டன் மட்டுமே எடை தாக்கும் திறன் உடையதாக இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. சிலையுடன் வாகனத்தையும் சேர்த்து 500 டன் என்பதால், நதியில் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, 6 நாள் முயற்சிக்கு பிறகு மார்கண்டேயன் நதியை கடந்து, தேசிய நெடுஞ்சாலைக்கு சிலை கொண்டு செல்லப்பட்டது. பின்னர், மேலுமலை என்ற இடம் வரை வெற்றிகரமாக சிலையை எடுத்துச் சென்றதால், கோவிந்தா கோஷமிட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com