Gun | Collector Office | கலெக்டர் ஆபீசுக்கு `Gun' உடன் வந்த நபர்.. விசாரணையில் வெளியான பின்னணி
Gun | Collector Office | கலெக்டர் ஆபீசுக்கு `Gun' உடன் வந்த நபர்.. விசாரணையில் வெளியான வெளிநாட்டு பின்னணி #Tiruppur #Gun #TNPolice #CollectorOffice திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடந்த நிலையில், பொதுமக்களின் வாகனங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது நகைக்கடை வியாபாரியான ராஜ்குமார் என்பவர் வந்த சொகுசு காரில் இருந்து அதிநவீன ஏர்கன்-ஐ போலீசார் கைப்பற்றினர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர் வெளிநாட்டில் இருந்து துப்பாக்கியை இறக்குமதி செய்து உரிமத்துடன் வைத்திருப்பதும், மற்றொரு துப்பாக்கிக்கு உரிமம் பெற ஆட்சியர் அலுவலகம் வந்ததும் தெரிய வந்தது. ராஜ்குமாரிடம் உள்ள ஏர் கன்கள், துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு பயன்படுத்தப்படுவது எனவும் தெரிய வந்துள்ளது.
