பெரியார் சிலை மீது காலணி வீசிய சென்னை வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம்

பெரியார் சிலை மீது காலணி வீசிய சென்னை வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
பெரியார் சிலை மீது காலணி வீசிய சென்னை வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம்
Published on

பெரியாரின் 140வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட போது, சென்னை அண்ணா சாலையில் அவரது உருவ சிலைக்கு கீழ் புகைப்படம் வைத்து பல்வேறு அரசியல் கட்சிகளும்,பொதுமக்களும் மரியாதை செலுத்தினர்.

அப்போது ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகதீசன் என்பவர் தனது செருப்பை எடுத்து பெரியார் சிலை மீது வீசினார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன் பரிந்துரையின் பேரில் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com