Periyapalayam | அமோனியா அகற்றும் பணி - தடையை மீறி திடீரென புகுந்த காரால் பரபரப்பு
அமோனியா அகற்றும் பணி - தடையை மீறி திடீரென புகுந்த காரால் பரபரப்பு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் இறால் ஆலையில் அமோனியாவை அகற்றும் பணி 2வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் காவல்துறை தடுப்பை மீறி கார் ஒன்று நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை அருகே உள்ள சாலையில் பாதுகாப்பு கருதி போலீசார் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் என்ற பெயர் பலகையுடன் வந்த கார், போலீசாரின் எச்சரிக்கையை மீறி, அமோனியா வாயு அகற்றும் தொழிற்சாலையை கடந்து சென்றது. சாலையில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்துமீறி சென்ற கார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
