சூனியம் வைக்க Google Pay-வில் ரூ.21 லட்சம் அனுப்பிய ஆசாமி - சாமியாருக்கும் சேர்த்து போலீஸ் பூஜை
மாந்திரீகம் மூலம் கொல்ல முயன்ற விவகாரத்தில், போலி சாமியார் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரகு என்பவர், சென்னையில் மாந்திரீக தொழிலை செய்து வந்துள்ளார். மேலும், யூடியூப் சேனல் தொடங்கி கூகுள் பே மூலம் பணம் பெற்று பலரை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணா என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சிபி என்ற முரசொலி மாறனை மாந்திரீகம் மூலம் கொல்வதற்காக ரகுவிற்கு, சுமார் 21 லட்சம் ரூபாய் வரை அனுப்பியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிபி, பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், ரமேஷ் கிருஷ்ணா மற்றும்
ரகுவை போலீசார் கைது செய்தனர்.
Next Story
