Pawan Kalyan Tamil Post | "சென்னையில் வளர்ந்த நான்" - உள்ளம் உருகி பவன் கல்யாண் தமிழில் போட்ட பதிவு

"மகாகவி பாரதியார் பாரத் ரத்னாவுக்கு தகுதியானவர்" - பவன் கல்யாண்

மகாகவி பாரதியார் பாரத ரத்னா விருதுக்கு உண்மையிலேயே தகுதியானவர் என ஆந்திர துறை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். சென்னையில் வளர்ந்த தாம் பாரதியாரின் வாழ்க்கையில் இருந்து தாய்நாட்டிற்கான அர்ப்பணிப்பு, தாய்மொழி மீது அன்பு மற்றும் பிற மொழிகளுக்கான மரியாதையை கற்றுக் கொண்டதாக தெரிவித்ததோடு , தமிழில் பாரதியார் தொடர்பான பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com