சென்னை தாம்பரம் -நாகர்கோவில் இடேயே தரம் உயர்த்தப்பட்ட சொகுசு ரயில் இயக்கம் நேற்று தொடங்கியது. சென்னை கோட்ட மூத்த பிரிவு பொறியாளர் ராமன் ரயிலின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். குஷன் இருக்கை, வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த ரயலில் இடம் பெற்றுள்ளன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு திங்கள், செவ்வாய் ,புதன் கிழமைகளிலும் நாகர்கோவிலில் இருந்து செவ்வாய், புதன், வியாழன் கிழமைகளிலும் இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது. சொகுசு ரயிலில் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.