கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் தர்ணா...

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் நள்ளிரவில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் தர்ணா...
Published on
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து பயணிகள், நள்ளிரவில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் செங்கல்பட்டு, தின்டிவனம், விழுப்புரம் போன்ற ஊர்களில் நிற்காது என நடத்துநர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், நள்ளிரவில் அரசு பேருந்தை சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்துக்கு பிறகு, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் பேருந்துகள் வரவழைத்து, பயணிகளை அனுப்பி வைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com