

அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப, தினமும் உணவு மற்றும் தண்ணீர் கேன்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் இந்த இளைஞர்கள், ஆதரவற்ற அனைவருக்கும் கொடுத்து வருகின்றனர். மன நலம் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக குளிக்காமல், சாலையில் திரிந்து கொண்டிருந்த மனிதர்களுக்கு, முடிவெட்டி, குளிப்பாட்டி, நல்ல உடை, காலணி , போர்வை என கொடுத்து வாஞ்சையோடு பராமரித்து வருகின்றனர்.
மனிதநேயமுள்ள இந்த இளைஞர்களின் சேவைக்கு ஆதரவு தரும் அவர்களின் குடும்பத்தினர், நிதி உதவியும் செய்கிறார்கள். கேட்பாரற்று கிடப்பவர்களுடன் செல்பி எடுத்து, இணையதளங்களில் பதிவிட்டு பிரபலம் அடைய முயற்சிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், வடமதுரை நகரையே பசியில்லா வடமதுரை ஆக்க முயற்சித்துவரும் இந்த இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்...