Daughter And Father அசிங்க அசிங்கமா கொட்டிக்கிடந்த வீடியோஸ் - குறுக்கு வழிதேடும் பெற்றோர்களே உஷார்..

நாகர்கோவில் அருகே பெண்ணிடம் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி, 25 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருப்பதிசாரம் கீழூர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்ணின் தந்தைக்கு அரக்கோணத்தை சேர்ந்த பிரபாகரன் அறிமுகமானார். அப்போது அந்தப் பெண்ணுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி, 25 லட்சம் ரூபாய் வரை பிரபாகரன் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பிரபாகரனை கைது செய்து, அவரது செல்போன், லேப்டாப்பை சோதனை செய்ததில், ஏராளமான பெண்களை ஏமாற்றி அவர் உல்லாசமாக இருந்த வீடியோ கண்டறியப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com