சென்னையை அதிர விட்ட பெயிண்டர் கொலை - கைதானவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

x

பள்ளிக்கரணை பெயிண்டர் கொலை சம்பவத்தில் கைதானவர்கள், தாயை பற்றி தவறாக பேசியதால் கொலை செய்ததாக, வாக்குமூலம் அளித்துள்ளனர்.சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரசாந்த். பெயிண்டரான இவரை 5 பேர் கொண்ட கும்பல், மர்ம உறுப்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அதே பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரை சேர்ந்த சரத்குமார், ஜெயராஜ், இம்மானுவேல் ஆகியோரையும், வேளச்சேரி ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த முகமது ஷகீல், திலோத்தீஸ்வரன் ஆகியோரயும் கைது செய்தனர். கைதானவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், பிரசாந்த் தங்களையும், தங்கள் தாய் மற்றும் சகோதரிகளையும் அடிக்கடி கெட்ட வார்த்தையில் திட்டுவார் என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, தாய் மற்றும் சகோதரிகளின் நடவடிக்கைகள் குறித்து தவறாக பேசி வந்ததாகவும், அதனால் மதுபோதையில் இருந்த அவரை தனியாக அழைத்து சென்று வெட்டி கொன்றதாகவும் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்