Ooty | Snake | உதகை கேரட் தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு
உதகை அருகில் கேரட் தோட்டத்தில் மலைப்பாம்பு புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பாம்பை கண்டு பயந்து தொழிலாளர்கள் பணியை நிறுத்தி தோட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மலைப் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். மேலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பாம்புகள் வீடுகளில் தஞ்சம் அடையலாம் என்றும் பாம்புகளை கண்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
