ஓமலூ : "பத்திரம் இருந்தும் பட்டா வழங்க மறுப்பு" : 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புகார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, பட்டா வழங்காததால், எந்தவித சலுகைகளையும் பெற முடியாமல் தவிப்பதாக பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
ஓமலூ : "பத்திரம் இருந்தும் பட்டா வழங்க மறுப்பு" : 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புகார்
Published on
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, பட்டா வழங்காததால், எந்தவித சலுகைகளையும் பெற முடியாமல் தவிப்பதாக பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். பட்டா வழங்குமாறு, வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டால், குடிசை மாற்று வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என தட்டிக்கழிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பத்திரம் வைத்திருந்தும், பட்டா பெற முடியாமல் இருக்கும் தங்களுக்கு உதவ, அரசு முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com