சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் முறையிலான மென்பொருள் முறையாக செயல்படவில்லை. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசலும், பாதிப்பும் ஏற்பட்டது. இதனால், சுமார் இரண்டு மணி நேரமாக ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்றதால் பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதையடுத்து கூடுதல் பாதைகள் அமைத்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.