ஆயிரத்து ஓராவது பொய் சொல்லி 26-ஐ மனைவியாக்கிய 57.. NRI ரிட்டர்ன் மாப்பிள்ளை இப்போ கம்பிக்குள்

x

சேலத்தை சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒருவரின் கணவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார். இதில், இப்பென்ணுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், வெளிநாடு வாழ் இந்தியரான பாஸ்கர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பாஸ்கருக்கும் ஏற்கனவே திருமணமாகி, மனைவி உயிரிழந்த நிலையில், அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணத்தின் போது தனக்கு 40 வயதுதான் ஆகிறது என்றும், தனது இரு குழந்தைகளும் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் எனவும் பாஸ்கர் கூறியதாக தெரிகிறது. ஆனால் திருமணத்திற்கு பிறகு பாஸ்கரின் வயது 57 என்பதையும், அவரின் இரு பெண் குழந்தைகளும் தன் வயதை ஒத்தவர்கள் என்பதையும் அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாகவும், தன் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு தினமும் சித்ரவதை செய்ததாகவும் கூறி இளம்பெண் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், முதல் கணவரின் குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது, மனைவியை துன்புறுத்தியது என 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த நிலையில், பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்