"அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை" - கொரோனா தடுப்புக்கு நாட்டு மருந்து - தவறான தகவல்.!

கொரோனாவைத் தடுக்கும் நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்ததாகப் பரவும் தகவல் தவறானது என

தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது... தேன், மிளகு, இஞ்சி கலந்து 5 நாட்கள் எடுத்துக்கொண்டால் கொரோனா 100% தடுக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவுவதாகவும், இது தவறான தகவல் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2018ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு சளி மற்றும் இருமலுக்கான கசாயம் செய்வதற்கான சமையல் குறிப்பு என வெளியான புகைப்படத்தை கொரோனா மருந்து என்று பரப்பி வருவதாகவும், இது கொரோனாவுக்கான மருந்து என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை எனவும் அறிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com