"3 நாளா கரண்ட் இல்ல.." - இருளில் மூழ்கிய கிராமம் - மின் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை
Vellore | "3 நாளா கரண்ட் இல்ல.." - இருளில் மூழ்கிய கிராமம் - மின் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 5 நாட்களாக மின்சாரம் துண்டிக்க பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொண்டசமுத்திரம் குறிஞ்சி நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்தன. இது வரை சேதாரங்கள் சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படாததால் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருளில் மூழ்கியுள்ளன. மின் வாரிய அதிகாரிகள் உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story