கரண்டால் அப்படி அப்படியே நின்றுபோன நீலகிரி.. 30 மணி நேரம் திணறிய மக்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழையால் 30 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மருத்துவமனையிலும் மின்சாரம் இல்லாத‌தால், ஜெனரேட்டர் இருந்தாலும், CT SCAN , X-RAY , எடுக்க முடியாத நிலையில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தேயிலை தொழிற்சாலைகள் இயங்காமல் சிறு குரு விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரப் பகுதியில் உள்ள சிறிய ஹோட்டல்கள், மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன. BSNL சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com