Nilgiris Cheetah CCTV | நாயை வேட்டையாட வெறியோடு ஊருக்குள் புகுந்த சிறுத்தை - அதிர்ச்சி சிசிடிவி
Summary
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அட்டடி கிராமத்தில் வலம் வந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, நாயை வேட்டையாடும் நோக்கில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால், அதை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
