அவலாஞ்சி பகுதியில் தொடர் கனமழை : நிலச்சரிவுகளை சரி செய்யும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி பகுதியில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவலாஞ்சி பகுதியில் தொடர் கனமழை : நிலச்சரிவுகளை சரி செய்யும் பணி தீவிரம்
Published on
நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி பகுதியில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பல ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மழையால் இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி தவித்த 11 பேர் ஹெலிகாஃப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவலாஞ்சி பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளை சரி செய்ய இரண்டு நாட்களாகும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
X

Thanthi TV
www.thanthitv.com