நில அளவீட்டில் புதிய மாற்றம் -வெளியான தகவல்
அரியலூரில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தின் அளவீடு முறைகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட பயணியர் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளில்லா ட்ரோன் மூலம் அளவீடு செய்யப்படும் எல்லை பரப்பினை சென்சார் மூலம் நிர்ணயித்து, நில ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
இவ்வாறு நிலஅளவை செய்து தயார் செய்யப்பட்ட வரைபடத்தில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்கள் உரிய அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
