Nellai Waqf Board Issue | வக்ஃபு வாரிய நுழைவு வாயில் மீது கறுப்பு மை - நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் வக்ஃபு வாரிய நுழைவு வாயில் மீது கறுப்பு மை பூச்சு
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தின் நுழைவு வாயில் அலங்கார வளைவில் மர்ம நபர்கள் கருப்பு மையை பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் முத்திரையுடன் இடம்பெற்றுள்ள அறிவிப்பு பலகை மீது மர்ம நபர்கள் கருப்பு மையை பூசி உள்ளனர். இதுகுறித்து வக்பு வாரிய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், நெல்லை மாநகர காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
