நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள குறுக்குதுறை சுப்பிரமணியசுவாமி கோவிலில், லட்சதீப விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கடந்த 6 நாட்களாக யாக சாலை பூஜை நடைபெற்றது. லட்ச தீப விழாவின் போது லட்சம் எண்ணிக்கையிலான விளக்கு ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம் செய்தனா்.