வெள்ளத்தால் புதைந்த புல்லட் | Nellai | Rain | Flood
நெல்லை வண்ணாரப்பேட்டையில் கனமழை வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் கவலையில் மூழ்கினர். நெல்லையில் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், வண்ணாரப்பேட்டை அம்பேத்கர் வடக்கு தெருவில் வெள்ளத்தால் பல்வேறு வீடுகள் சேதமடைந்தன. ஏராளமான வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்த நிலையில், வெள்ளத்தில் கார் அடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதோடு தேங்கிய மழைநீரில் பாம்பு இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
