

பணகுடி பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஊரடங்கு காரணமாக இயங்கவில்லை. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தொழில் இன்றி சிரமப்பட்டனர். இதனை அறிந்த நெல்லை பாராளுமன்ற தொகுதி திமுக எம்பி ஞான திரவியம் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.