Nellai | 2 சிறுவர்கள் கைது.. நெல்லையில் ஷாக்கிங்

நெல்லை அருகே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2 சிறுவர்கள் கைது நெல்லை அருகே சிறுவர்கள் இருவர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 16 வயதுடைய 2 சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நயினார் காலனி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, சிறுவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளின் அடிப்படையில், அவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பின்னர், கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com