

ஒடிசாவில் இருந்து வந்த ரேஷன் அரிசியை லாரிகளில் ஏற்ற எதிர்ப்பு
இதனிடையே, ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் நாமக்கல் கொண்டு வரப்பட்ட
2 ஆயிரத்து 500 டன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு லாரி மூலம் ஏற்றிச் செல்ல, லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாமக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸார் குவிக்கப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், தொப்பூர் சுங்கச் சாவடியில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி, சண்முகப்பா, சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்றார்.