

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நாகப்பட்டினத்தை சேர்ந்த 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்து டெல்லிக்கு நாடுகடத்தப்பட்ட 14 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், விசாரணையை துரிதப்படுத்துவதற்காக, சிறையில் உள்ள 7 நபர்களை காவலில் எடுக்க முடிவு செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், சென்னை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டி, ஏழு பேரையும், 5 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து சென்றனர்.