Namakkal Theft | புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் புகுந்து பட்டப்பகலில் கைவரிசை |பரபரப்பு சிசிடிவி
Namakkal Theft | புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் புகுந்து பட்டப்பகலில் கைவரிசை |பரபரப்பு சிசிடிவி
புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் பகல் நேரத்தில் கைவரிசை நாமக்கல் மாவட்டம் குள்ளங்காடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் பகல்நேர திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில், மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
