பரமத்திவேலூர் : ஆடி மாதம் நடக்கும் மகாபாரதக் கதை

நாமக்கல் அருகே நடந்த மகாபாரதக் கதை நிகழ்வை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.
பரமத்திவேலூர் : ஆடி மாதம் நடக்கும் மகாபாரதக் கதை
Published on
நாமக்கல் அருகே நடந்த மகாபாரதக் கதை நிகழ்வை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். பரமத்திவேலூரில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பஞ்சபாண்டவர் கதையான மகாபாரதக் கதை நடைபெறுவது வழக்கம். 46 வது ஆண்டாக நடந்த இந்த நிகழ்வில் துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக 100அடியில் துரியோதனன் சிலை மண்ணினால் செய்யப்பட்டு இருந்தது. மழை பெய்து விவசாயம் செழிப்படையவும், மக்களின் நன்மைக்காகவும் இந்த நிகழ்வு வருடந்தோறும் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மகாபாரதக் கதையில் நடிகர்கள் பலரும் தத்ரூபமாக நடித்த காட்சியை திரளான மக்கள் பார்த்து ரசித்தனர்..
X

Thanthi TV
www.thanthitv.com