ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்

அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்
ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்
Published on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில்,ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இதனையடுத்து 5 நாள் காவலில் அவரை விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு,நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் மீண்டும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது, நந்தகுமாரை வரும் ஜூன் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com