Nagapattinam | Rowdy | Police | சாமியார் வேடத்தில் கஞ்சா விற்பனை - APP மூலம் ஆப்பு வைத்த போலீஸ்

சாமியார் வேடத்தில் கஞ்சா விற்பனை - APP மூலம் ஆப்பு வைத்த போலீஸ்

Nagapattinam | Rowdy | Police | சாமியார் வேடத்தில் கஞ்சா விற்பனை - APP மூலம் ஆப்பு வைத்த போலீஸ் கொலை குற்றவாளி ரவுடி கிரேட்டன் கைது - தனிப்படை போலீசார் நாகை அருகே பைனான்சியரை கொலை செய்து தலைமறைவாக இருந்த ரவுடி கிரேட்டன் என்வரை வேளாங்கண்ணி தனிப்படை போலீசார் கைது செய்தனர். வேளாங்கண்ணி பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த பைனான்சியர் மனோகர் என்பவர் கடந்த ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கிரேட்டன் என்பவர் தலைமறைவான நிலையில், தனிப்படை போலீசார் க்ளப் ஹவுஸ் club house என்ற செயலி மூலம் தேடி வந்தனர். வேளாங்கண்ணி டிஎஸ்பி நிக்‌ஷன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டையை போலீசார் தொடர்ந்து வந்தனர். சம்பவத்தன்று சாமியார் வேடமிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த கிரேட்டனையும், டைசன் என்ற மற்றொரு ரவுடியையும் கருவேலங்கடை மெயின் ரோட்டில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com