

நாகையில், கிராம சுகாதார செவலியர்கள் சங்கத்தின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முன்னதாக, செவிலியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்றனர். பேரணியில், செவிலியர்கள் பதவி உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ,
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.