Nagapattinam | சிக்கல் சிங்காரவேலருக்கு 16 வகை மகா அபிஷேகம்
Nagapattinam | சிக்கல் சிங்காரவேலருக்கு 16 வகை மகா அபிஷேகம்
Nagapattinam | சிக்கல் சிங்காரவேலருக்கு 16 வகை மகா அபிஷேகம்
நாகப்பட்டினம் அருகே சிக்கலில் புகழ்பெற்ற சிங்காரவேலர் கோயிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சிங்காரவேலருக்கு பால், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிங்காரவேலருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பினர்
