

நாகையில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால்,54 கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடல்கொந்தளிப்பு காரணமாக, விசைப்படகு மீனவர்கள், மீன்பிடிக்க முடியாமல் நேற்று அவசர அவசரமாக கரை திரும்பினர். தொடர்ந்து கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால், 40 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.