Mylapore | Liquor | கேன் வாட்டரில் கள்ளச்சாராயம் சப்ளை.. மயிலாப்பூரில் சிக்கிய பெண்

மயிலாப்பூரைச் சேர்ந்த வனிதா என்பவர், கள்ளச்சாராயம் விற்பதாக மயிலாப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சோதனை நடத்திய போலீசார் தண்ணீர் கேன்களுக்கு நடுவே இருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டதில், ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்து விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com