முக்கொம்பு அணையை கட்டிய ஆர்தர் தாமஸ் காட்டனின் சிறப்புகள்...
இத்தகையை பல்வேறு பெருமைகளை செய்த ஆர்தர் தாமஸ் காட்டனின் பெருமையை நினைவு கூறும் வகையில், முக்கொம்பு அணையில் அவருக்கு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு வடிவம் கொடுத்த பென்னி குயிக்கிற்கு கிடைத்த பெருமை போல இவருக்கு கிடைக்கவில்லை என்பதும் வேதனையான ஒன்றாகவே மக்களால் பார்க்கப்படுகிறது... முக்கொம்பு அணையில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றில் முத்தான வார்த்தை ஒன்றை பொறித்து வைத்திருக்கிறார் காட்டன். இந்த அணையை கட்டி முடிக்க அப்போதைய மதிப்பில் 2 லட்ச ரூபாய் செலவானது என்றும், இதன் பயன் என்ன என்பதை எதிர்கால தலைமுறை உணரும் போது தான் தெரியும் என முத்தாய்ப்பாக முடித்திருக்கிறார்...அவர் சொல்லிச் சென்ற அந்த வார்த்தையின் பலனை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்... நீர் மேலாண்மை என்பதை அணைகளில் மட்டுமல்ல... நம் வீடுகளிலும் திறம்பட செய்வதே இவரைப் போன்றவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை...
