முகிலன் நண்பர் மீதான பாலியல் வழக்கு விசாரணை - இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

முகிலனின் நண்பர் விஸ்வநாதன் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
முகிலன் நண்பர் மீதான பாலியல் வழக்கு விசாரணை - இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Published on

கரூர் மாவட்டம் நஞ்சைபுகலூரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்," விசாரணையின் போது மனுதாரரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களில் முரண்பாடுகள் உள்ளதாகவும், இதனால் காவல் துறையினர் வேண்டுமென்ற பழி சுமத்தியுள்ளது தெரிய வருவதாக வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரர் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com