Tiruvannamalai | 1 வயது குழந்தையுடன் கிணற்றில் மிதந்த தாய் சடலம்.. தி.மலையில் அதிர்ச்சி

x

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே தாய் மற்றும் ஒரு வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரிக்கலாம்பாடி கிராமத்தில் வசிப்பவர் விக்னேஷ்.இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உமா தேவி என்பவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்தது.இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தாய் மற்றும் குழந்தை சடலமாக கிடந்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்