"பண மழை கொட்டும்..."பெண் டாக்டரின் பேச்சை கேட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

"பண மழை கொட்டும்..." பெண் டாக்டரின் பேச்சை கேட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

உத்திரமேரூரில் லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் மருத்துவரை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் வி.ஜீ. சௌமியா என்பவர் மருத்துவ உபகரணங்கள் வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறி பல பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி உள்ளார். ஒரு சிலருக்கு சிறிய அளவில் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு, சௌமியா தலைமறைவான நிலையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com