பேருந்தில் பயணியிடம் திருட்டு : 4 பெண்கள் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பிக் பாக்கெட் அடித்த நான்கு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பேருந்தில் பயணியிடம் திருட்டு : 4 பெண்கள் கைது
Published on

மதுராந்தகம் அருகே பொம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுபா என்பவர் நகையை அடகு வைத்து, 1 லட்சம் ரூபாய் பணத்துடன் மதுராந்தகம் பேருந்து நிலையம் வந்தபோது மர்மநபர்கள் அவரது பணத்தை லாவகமாக திருடி சென்றுள்ளனர்.

பணம் இல்லாத‌தை கண்டு அதிர்ச்சியடைந்த சுபா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை அடுத்து பணத்தை திருடி சென்ற உஷா, அனிதா, அபிராமி, கல்யாணி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com