CCTV | Viral Video | TN Police | வலிப்பு நோய் வந்தது போல நாடகமாடி பணம் பறிப்பு - கோவையில் அதிர்ச்சி
வலிப்பு நோய் வந்தது போல நாடகமாடி பணம் பறிப்பு - கோவையில் அதிர்ச்சி
வலிப்பு நோய் வந்தது போல நாடகமாடி பணம் பறிப்பு - கோவையில் அதிர்ச்சி கோவையில், வலிப்பு வந்தது போல் நடித்து பொதுமக்களிடம் பணம் பெற்றதாக கூறப்படும் பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவானந்தா காலனி, ரத்தினபுரி, லட்சுமிபுரம், விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெண் ஒருவர் வீடுகளின் வாசல் மற்றும் சாலைகளில் திடீரென விழுந்து, வலிப்பு ஏற்பட்டது போல் உடலை நடுங்க வைத்து நடித்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து, சொந்த ஊர் செல்ல பணம் வழங்கியுள்ளனர். ஆனால் அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் சிலர் அவரை பின்தொடர்ந்து சென்றபோது, மற்றொரு வீட்டின் முன்பும் இதேபோல் நடித்து பணம் பெற முயன்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
