

வருகிற ஜனவரி 3ம் தேதி மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கோபாலபுரம் இல்லத்திற்கு, மனைவியுடன் வந்திருந்த மு.க.அழகிரி, தாயார் தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனவரி 3ம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாகவும், அவர்களின் ஆலோசனையின் படி, தேர்தல் பங்களிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.