பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு மக்களை போராட தூண்டி, பின் அதை ஒடுக்கும் பாஜக அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் வளர்ச்சி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதிமுக அரசின் நிர்வாக திறமின்மையால், தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.