சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னை - மெரீனா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு, தமிழக அமைச்சர்கள் - அதிமுக நிர்வாகிகள், மலர்தூவி மரியாதை செலுத்தினர். மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன், சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜ லட்சுமி மற்றும் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.