முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராசி காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை சுண்டக்காமுத்தூரில், பல்வேறு நடத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய அவர், தமிழக முதலமைச்சர் கட்சி, சாதி, மத வேறுபாடின்றி மக்களுக்காக வேலைப்பார்த்து வருவதாக கூறினார்.