தமிழகத்திற்கு துரோகம் செய்தது திமுக-காங். கூட்டணி : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4 ஆம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்கு 10 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பில் 137 அடுக்கு மாடி குடியிருப்புகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழகத்திற்கு துரோகம் செய்தது திமுக-காங். கூட்டணி : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
Published on

கோவை புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4 ஆம் அணியில் பணிபுரியும் காவலர்களுக்கு 10 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பில் 137 அடுக்கு மாடி குடியிருப்புகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். காணொளி வாயிலாக நடைபெற்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர்கள் போல் கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்துவதாக குறிப்பிட்டார். பா.ஜக தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை எனவும், திமுக- காங்கிரஸ் கூட்டணி தான், துரோகம் செய்ததாக குற்றஞ்சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com